செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்த அனுபவம் நிறையப் பேருக்கு உண்டு. தானாகவே யாரும் நனைக்கமாட்டோம். எனினும் எதிர்பாராதவிதமாக இது நடந்துவிட்டிருக்கும். அப்போது என்ன செய்யலாம்?
1) முதலில் செல்பேசியின் மின்னிணைப்பைத் துண்டிக்கவும்.
2) செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.
3) ஒரு கிண்ணம் முழுவதும் 'அரிசி' யை எடுத்துக்கொள்ளவும். அரிசியானது ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சக்கூடிய ஒரு பொருளாகும். (சமைக்கப்படாத அரிசி மட்டுமே இந்தச் செய்முறைக்கு உதவும்)
4) உறையிலிட்ட செல்பேசி / ஐ-பொட் ஐ இந்தக் கிண்ணத்தில் உள்ள அரிசிக்குள் 24 மணிநேரம் வைத்திருக்கவும்.
5) செல்பேசி / ஐ-பொட்டின் - மின்கலங்களை (பேட்டரி) தனியாக வேறொரு அரிசிக்கிண்ணத்தில் வைப்பது உத்தமம்.
6) ஒட்டுமொத்த ஈரப்பதமும் துப்புறவாக உலர்வதற்கு 24 மணிநேரமாவது தேவைப்படும்.
7) அடுத்த நாள் உங்களது தண்ணீரால் நனைக்கப்பட்ட கருவி அற்புதமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
Chanthru Info
Chanthru Info





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக